Friday, August 27, 2010

ரமழான் மாதம் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை

ரமழான் மாதம் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை நமது மக்களின் அதிருப்தியை வாரிக்கொண்டது. ஒலிபரப்பு விற்பன்னர்கள் எனத் தம்மைக் கருதும் சிலர் அதனை எவ்வாறு ஏலத்தில் விட்டுள்ளார்கள் என்பதை பெரிதாக ஒன்றும் விளக்கிச்சொல்ல வேண்டியதில்லை. நாள் பூராகவும் பயான், சிறப்புப்பேச்சு, விசேட உரை, நற்சிந்தனை, விசேட பயான்..அப்பாடா சொற்பொழிவு மயம். நிகழ்ச்சிகளின் பன்முகத்தன்மைக்கு இடமே இல்லை. குர்ஆனும் ஹதீசும் வர்த்தகமயமாகிவரும் இந்த நிலையில் சில ஒலிபரப்பு யாசகர்களின்கையில் மாட்டித் தவிக்கும் முஸ்லிம் சேவையை காப்பாற்றி உயிர்துடிப்புள்ளதாக மாற்றவேண்டியது சகலரதும் கடமையாகும். அரசியல் காக்காக்கள் சிலரும் இந்த சீரழிவுக்குப் பல்வேறு விதங்களின் உடந்தை என்பதை வெகு விரைவில் மக்கள் புரிந்துகொள்ளவார்கள். அன்பின் நண்பர்களே சமகால முஸ்லிம் ஒலிபரப்பு தொடர்பாக உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை நம்மோடு பகர்ந்து கொள்ளுங்கள். அதில் எத்தகைய மாற்றங்கள் இடம்பெற வேண்டும் என்பதையும் சொல்லுங்கள். அல்லது புதிய பணிப்பாளர் அல்-ஹாபிழ் எஸ். முஹம்மது ஹனீபாவுக்கு உங்கள் காத்திரமான அபிப்பிராயங்களைத் தெரியப்படுத்துங்கள்.

No comments:

Post a Comment