ஒரு காலத்தில் முஸ்லிம் சேவை ஒலிபரப்பின் தரம் மிகவும் மேலோங்கியிருந்தது. சாதாரண வாழ்வில் சகல அம்சங்களையும் முஸ்லிம் சேவை ஒலிபரப்பு உள்ளடக்கியிருந்தது.வெறும் சமயப் பிரச்சார ஊடகமாக மாத்திரம் அது செயற்படவில்லை. இலக்கியம், சமய உபதேசம், கலை கலாசாரம், சர்வதேச விவகாரம், அறிவியல் என பல்வேறு விதமான உள்ளடங்க்கங்களை முஸ்லிம் சேவை கொண்டிருந்தது. பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியறிவில் உயர்ந்தவர்கள், சாதாரண கிராமிய மக்கள், வர்த்தகர்கள் என்று சகலதரப்பினரையும் முஸ்லிம் சேவை திருப்திப்படுத்தியது. ஆண்பெண் பாகுபாடும் அன்று இருக்கவில்லை.
ஒலிபரப்பின் உத்திகள், தயாரிப்பின் செம்மை என்பன மக்களை மிகவும் கவரும் விதத்தில் அமைந்திருந்தன. இன்று முஸ்லிம் ஒலிபரப்பு முழு சமுகத்தையும் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றது. மக்களை பகடைகாளக் கணிக்கத் தொடங்கிவிட்டது. இந்த வரலாற்றுத் துரோகத்தை சீரணித்துக்கொண்டு வயிற்றுப் பிழைப்புக்காக குப்பை கூழங்களை முஸ்லிம் மக்களின் காதுகளில் கொட்டத்தொடங்குகின்றது முஸ்லிம் சேவை.
ஒலிபரப்பின் உத்திகள், தயாரிப்பின் செம்மை என்பன மக்களை மிகவும் கவரும் விதத்தில் அமைந்திருந்தன. இன்று முஸ்லிம் ஒலிபரப்பு முழு சமுகத்தையும் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றது. மக்களை பகடைகாளக் கணிக்கத் தொடங்கிவிட்டது. இந்த வரலாற்றுத் துரோகத்தை சீரணித்துக்கொண்டு வயிற்றுப் பிழைப்புக்காக குப்பை கூழங்களை முஸ்லிம் மக்களின் காதுகளில் கொட்டத்தொடங்குகின்றது முஸ்லிம் சேவை.

No comments:
Post a Comment